இன்று இலங்கையின் சுதந்திர தினம்! டிவிட்டரில் தமிழ், சிங்களத்தில் வாழ்த்து தெரிவித்த மோடி
டெல்லி: இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி, சிங்களத்திலும், தமிழிலும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம்தேதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே அந்த நாட்டில் இன்று 67 வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, இலங்கைக்கு தனது வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மோடி, தனது வாழ்த்துக்களை தெரிவித்து அசத்தியுள்ளார்.
ශ්රී ලංකාවේ අනාගත සංවර්ධනය උදෙසා මාගේ සුභ පැතුම්.
මෙම මස අග භාගයේදී ජනාධිපති සිරිසේන මහතා පිළිගැනීමට මම බලාපොරොත්තුවෙන් සිටිමි.
— Narendra Modi (@narendramodi) February 4, 2015 "இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிரிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications