எங்கு வேண்டுமானாலும் போகலாமே.. ஆமீர்கானின் சகிப்புத்தன்மை கருத்துக்கு மோகன்தாஸ் பை பதிலடி
பெங்களூர்: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி இந்தியாவை விட்டே வெளியேற தனது மனைவி விரும்பியதாக நடிகர் ஆமீர் கான் கூறியதை மணிப்பால் குளோபல் எஜுகேசன் தலைவர் மோகன்தாஸ் பை கண்டித்துள்ளார்.
ஆமீர்கான் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும்வகையில் மோகன்தாஸ் பை வெளியிட்டுள்ள டிவிட் ஒன்றில் கூறியிருப்பதாவது: 'இந்தியாவின் அரசியல் சாசனத்தில், முழு சுதந்திரம் பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஃப்ரீ நாடு' என குறிப்பிட்டுள்ளார்.
Anybody who does not believe in India has full freedom under constitution to go anywhere else!free country https://t.co/Wjji3NK5fM
— Mohandas Pai (@TVMohandasPai) November 23, 2015 இந்த டிவிட் ஒருதலைபட்சமாக இருப்பதாக அவரின் ஃபாலோவர் ஒருவர் கேட்டு டிவிட் செய்ததற்கு பதில் கொடுத்துள்ள, மோகன்தாஸ் பை "புள்ளி விவரம் இல்லாமல், இந்தியாவையும், இந்தியர்களையும், அவமானப்படுத்தும் ஒரு நபரை பார்த்து நான் கேள்வி எழுப்பியது, கேலியாகாது. உண்மையின் பக்கம் நில்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications