ஒரு கெட்ட செய்தி: 106% மழை பெய்தாலும் தண்ணீர் பஞ்சம் தீராதாம்!
டெல்லி: இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்தாலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் தீராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. மக்கள் பருவமழையை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை காலத்தில் 106 சதவீதம் மழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து வாட்டர்எய்ட் இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவர் நித்யா ஜேக்கப் கூறுகையில்,

பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. அதனால் 106 சதவீதம் மழை பெய்தாலும் தண்ணீர் பஞ்சம் தீராது. கடந்த இரண்டு முறை பருவமழை காலங்களில் போதிய மழை பெய்யவில்லை. அதனால் நில்லத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. மக்கள் குடிக்கக் கூட நீர் இல்லாமல் அல்லாடி வருகிறார்கள் என்றார்.
இந்தியாவில் உள்ள முக்கிய நீர்நிலைகள் 79 சதவீதம் காலியாக உள்ளது. மேலும் 75 சதவீத ஆறுகளிலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைவாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு பருவமழை வெளுத்து வாங்கினாலும் தண்ணீர் தேவை முழுவதுமாக தீர்ந்துவிடாது.
இதற்கிடையே கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications