For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட கிழக்கு மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வட கிழக்கு மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரங்களில் கன மழை- வீடியோ

    டெல்லி: தென் மேற்கு பருவமழை ஒடிஷா, மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம் ஆகிய பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
    மணிப்பூரில், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர மழைக்கால சூழல் உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை தாதக்கம் ஓடிஷா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படும். தானே, (மும்பை உட்பட), அஹ்மத்நகர், கட்டாக், மிட்னாபூர், கோல்பரா மற்றும் பாக்தோகோரா நகரங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Monsoon update: Heavy rain likely in Nagaland, Manipur, Mizoram and Tripura

    அருணாச்சல பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், தெற்கு கொங்கன் மற்றும் கர்நாடக, கேரள கடல் பகுதிகளில் கடும் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    Monsoon update: Heavy rain likely in Nagaland, Manipur, Mizoram and Tripura

    பெங்களூர் உட்பட கர்நாடகாவின் உள் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    Southwest Monsoon has now reached more parts of Odisha, Gangetic West Bengal, entire Arunachal Pradesh, some more parts of Assam, and Meghalaya and Sikkim. During the next 24 hours, active to vigorous Monsoon conditions are expected over Manipur, Mizoram, Nagaland, and Tripura.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X