வட கிழக்கு மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை
Recommended Video

டெல்லி: வட கிழக்கு மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரங்களில் கன மழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுபற்றி இன்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டீஸ்கர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரங்களில், கன அல்லது மிக கனமழை பெய்ய கூடும்.

கடலோர கர்நாடகா, அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள், ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்கள், விதர்ப்பா, தெற்கு கொங்கன், கோவா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பிராந்தியங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கிழக்கு உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா, ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா பகுதிகளில் புழுதி புயல் வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோவா, கர்நாடகா, கேரளா பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். வரும் வியாழக்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு தென் மேற்கு பருவமழை சற்று ஓய்ந்திருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications