அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. அதிர்ச்சி அளிக்கும் பேரிடர் மேலாண்மை
இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் ஒன்றை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டு உள்ளது.
Recommended Video

டெல்லி: இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் ஒன்றை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டு உள்ளது.
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. அதே சமயம் கர்நாடகாவிலும் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், இந்தியாவில் அடுத்த பத்து வருடங்களுக்கு அதிக வெள்ளம் ஏற்படும், இந்த வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும், இழப்புகளையும் பட்டியலிட்டுள்ளது.

தகவல் கிடைக்கிறது
இந்தியாவில் வெள்ள பாதிப்புகளை கண்டுபிடிக்க நிறைய வசதிகள் உள்ளது என்று தேசிய பேரிடர் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது. நம்மிடம் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை வைத்து எளிதாக பேரிடர்களை முன்கூட்டியே கணிக்க முடியும். அதை முன்கூட்டியே அறிவிக்கவும் முடியும். ஆனாலும், வெள்ளம் வருவதை தடுக்க முடியாது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இதற்கான காரணத்தையும் கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை
என்னதான் விஷயம் முன்கூட்டியே தெரிந்தாலும், இதுகுறித்து அரசும், அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். அதாவது பொதுவாக பேரிடரை கணித்தவுடன் அரசுடன் கூட்டம் போட்டு விவாதிப்பது வழக்கம், ஆனால் என்ன விவாதம் நடத்தினாலும் அதற்கு பிறகு பெரிய அளவில் எந்த மாநில அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஏற்பாடுகள் இல்லை
அதேபோல், இந்தியாவில் பெரும்பாலான கட்டிடங்கள், சாலைகள், வீடுகள் வெள்ளத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், நகரமயமாக்கல் காரணமாக பெரிய சேதங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை மாற்ற வழியே கிடையாது, பெரிய அளவில் நடவடிக்கை எடுத்து வெள்ளத்தை தடுத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்றுள்ளனர்.

அலட்சியமாக இருக்கிறது
அதேபோல் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்கள் பேரிடர்களை சமாளிக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கிறது என்று தெரிவித்துள்ளது. 640 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உத்தர பிரதேசம், உத்தர காண்ட் , பீகார், ஜார்கண்ட், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளது . தமிழ்நாடு, குஜராத் ஆகியவை நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் மொத்தமாக எல்லா மாநிலமும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுள்ளனர்.

என்ன மாதிரியான பாதிப்பு இருக்கும்
இதனால் இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து உள்ளது. இதனால் 47,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இதை தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications