1 நிமிடத்தில் 79 பேரை கட்டிப் பிடித்து ஹைதராபாத்தை சேர்ந்தவர் கின்னஸ் சாதனை !
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் 60 நொடியில் 79 பேரை கட்டிப்பிடித்து கின்னஸ் படைத்து உள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் மற்றவர்களை கட்டி அணைப்பதில் கின்னஸ் சாதனை புரிய முடிவு செய்துள்ளார். இதற்காக 88 பேர் வரிசையில் நிறுத்தப்பட்டனர்.

கிருஷ்ணகுமார் இவர்களில் 83 பேரை 60 நொடியில் கட்டிப் பிடித்தார். ஆனால், 4 முயற்சிகளை கின்னஸ் அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 79 மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முழுவதுமாக கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது வரைமுறை. இருப்பினும் அவரது சாதனையை ஏற்று கொள்ளப்பட்டதாக கின்னஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் சிட்னியில் கேரி பிக்மோர் என்பவர் 77 பேரை ஒரு நிமிட நேரத்தில் கட்டிப்பிடித்து சாதனை படைத்தார். இவருக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த ஒருவர் 75 பேரை ஒரு நிமிட நேரத்தில் கட்டிப் பிடித்து சாதனை படைத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications