தொலைத் தொடர்புத் துறையால் முகேஷ் அம்பானிக்கு ரூ.3,367 கோடி லாபம்... சிஏஜி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொலைத்தொடர்புத் துறையின் செயல்பாட்டால் முகேஷ் அம்பானிக்கு நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 367கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனத்தின் மீது தான் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குச் சந்தை விலையைவிடக் குறைவான தொகைக்கு உரிமம் வழங்கியதாகத் தொலைத்தொடர்புத் துறை மீது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 3 ஆயிரத்து 367கோடி ரூபாய் லாபம் அடைந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications