For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முலாயமுக்கு நட்டு கழன்றுவிட்டது, மனநல மருத்துவமனையில் அனுமதியுங்கள்: மாயாவதி

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை உடனே ஆக்ரா மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

Mulayam mocks Mayawati's marital status; send him to mental hospital, says BSP chief

முலாயம் ஒரு பெண்ணான என்னை அவமதித்துவிட்டார். அவருக்கு மனநிலை சரியில்லை. அதனால் அவரை உடனே ஆக்ரா மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு முலாயம் சிங் யாதவிற்கு தடை விதிக்க வேண்டும். என்னை அவர் அவமதித்துள்ளதால் என் கட்சியினர் முலாயம் மீது கோபத்தில் உள்ளனர். நான் தான் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளேன்.

தேர்தலில் எங்கள் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதால் சமாஜ்வாடி கட்சியினர் பயத்தில் உள்ளனர் என்றார்.

முன்னதாக பைசாபாத்தில் நடந்த பேரணியில் பேசிய முலாயம் கூறுகையில், மாயாவதியை செல்வி, திருமதி அல்லது சிஸ்டர் என்று அழைப்பதா என கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BSP chief Mayawati told that SP leader Mulayam Singh Yadav lost his mental balance hence he should be immediately admitted in the Agra mental hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X