லோக்சபா தேர்தலுக்கு முன்பே வேட்பாளர்களை அதிரடியாக மாற்றும் முலாயம்சிங் யாதவ்
லக்னோ: லோக்சபா தேர்தலுக்கு முன்பே தாம் அறிவித்த வேட்பாளர்கள் பலரையும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மாற்றி வருகிறார்.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் பல மாதங்களுக்கு முன்பே தமது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை முலாயம்சிங் யாதவ் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டோரில் சிலர் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாக இருந்து வருவதாக கட்சி மேலிடத்துக்கு தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்கெனவே அறிவித்த வேட்பாளர்கள் பலரை மாற்றும் நடவடிக்கைகள் மும்முரமாகி வருகின்றன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சியின் உத்தரப்பிரதேச மாநில செய்தி தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரையில் யாரை நிறுத்தினால் வெற்றி உறுதியோ அவர்களையே வேட்பாளர்களாக அறிவிக்கிறோம்.
இப்படி வேட்பாளர்களை மாற்றுவது என்பது வழக்கமான ஒன்றுதான். இதனால் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றார்.












Click it and Unblock the Notifications