ராஞ்சியில் விமானம் மீது பறவை மோதல்... நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு... பயணிகள் தப்பினர்!!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து மும்பைக்கு வருவதற்கு புறப்பட்ட விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் புறப்படுவது தடை செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.
கேரளாவில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தின் காயம் மறைவதற்கு முன்பு ராஞ்சியில் இன்று ஏற்படவிருந்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. ராஞ்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் புறப்படுவதற்கு தயாரானது. அப்போது விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. உடனே விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் நிகழவிருந்த ஆபத்து தடுக்கப்பட்டது. விமானத்தில் 176 பயணிகள் இருந்ததாகவும், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதில் பதிவு ஆகி இருக்கும் வாய்ஸ் ரெக்கார்டு மூலம் எந்த மாதிரியான விபத்து நடந்தது என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.

இதுபோன்று விமானம் தரையிறங்கும்போது, புறப்படும்போது விமானத்தின் மீது பறவைகள் மோதுவது சகஜம்தான் என்றாலும், விமானத்தின் மீது பறவை மோதுவதன் மூலம் விமானம் சேதம் அடையும் என்பதால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்படும்.
துபாயில் இருந்து நேற்றிரவு கேரள மாநிலத்தில் இருக்கும் கோழிக்கோடு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தரையிறங்கும்போது கன மழை பெய்து வந்த காரணத்தினால், நிதானம் இழந்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானம் இறங்கும்போது, வழுக்கி எதிரே இருந்த குழியில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. 18 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications