மும்பை பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நால்வரும் குற்றவாளிகள் - மும்பை கோர்ட்
மும்பை: 22 வயதான பெண் பத்திரிக்கை புகைப்பட நிபுணரை மும்பை சக்தி மில் பகுதியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய நான்கு வன்முறையாளர்களும் குற்றவாளிகள் என்று மும்பை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய மும்பை பகுதியில் சக்தி மில்ஸ் உள்ளது. பாழடைந்து கிடக்கும் இந்த ஆலைப் பகுதியில் பெண் புகைப்பட நிருபர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
5 பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது. அதோடு அவரது காதலரையும் அந்த கும்பல் தாக்கியது. இந்த வழக்கில்தான் நான்கு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு பேரும், அதற்கு முன்பு அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே ஆலைப் பகுதியில் 18 வயது டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலும் தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெண் புகைப்பட நிருபர் வழக்கில் விஜய் ஜாதவ், சலீம் அன்சாரி, காசிம் பெங்காலி, முகமது ஷேக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 5 ஆவது நபரான சிராஜ்ரகுமான் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறார் நீதிமன்றத்தில் இவன் விசாரிக்கப்படுகிறான்.
நான்கு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, குற்றம், பொதுப்பிரிவு,இயற்கைக்கு மாறான பாலியல் கொடுமை ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண் நிருபர் மிகவும் மன உறுதி படைத்தவர்.அவரே முன் வந்து தன்மேல் பாலியல் வன்முறை மேற்கொண்டவர்களைப் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு அளித்தார். மேலும் அவருடைய தகவல்களால்தான் போலீசார் அந்த குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை ஜெயில்கம்பிகளுக்கு பின்னால் தள்ள முடிந்தது.
இந்த பாலியல் வழக்கில் காவல்துறை மொத்தமாக 5 பேரை கைது செய்தது.அதன்பின், 28 நாட்களுக்கு பிறகு காவல்துறை 600 பகுதிகளைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.அதில் 41 சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.கடந்த 7 மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் 4 பேர் வழக்கமான நீதிமுறைகளின்படி கைது செய்யப்பட்டனர்.5ஆவது நபர் மட்டும் ஜுவனைல் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த 4 பேரும் வேலை இல்லாதவர்கள். அருகே உள்ள குடிசை பகுதியில் வசிப்பவர்கள். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும். அனே்கமாக நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications