கடற்படை கப்பலில் மீண்டும் தீ விபத்து: 3 பேர் காயம்!
மும்பை: கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மாலுமி உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மும்பை கடலில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எல். கங்கா கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.
கடந்த பத்து மாதத்தில் ஏற்பட்ட கடற்படை கப்பல்களில் 15 வது விபத்தாகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை கடற்படை தளம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ் சிந்து ராக்ஸாக் நீர் மூழ்கி கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஐ.என்.எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின் ஐ.என்.எஸ் கொல்கத்தா என்ற போர்க்கப்பலில், தீயணைப்பு கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக கமாண்டர் ஒருவர் பலியானார். கடந்த 10 மாதங்களில் கடற்படை கப்பல்கள் சந்தித்த 15வது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications