டிரீட் கொடுக்க அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்.. மும்பை போலீஸை அதிர வைத்த கொலை

மயூரா என்ற நபரை உணவு சாப்பிட கூப்பிட்டு தந்திரமாக அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மயூரா என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவர் அவரது நெருங்கிய நண்பர்களால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கொலை செயலில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தனித்தனியாக போலீசில் தங்களது வாக்குமூலத்தை அளித்து இருக்கின்றனர்.

டிரீட் ஒன்றிருக்காக உணவு வாங்கி கொடுப்பதாக கூறி நண்பரை கொலை அழைத்து சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் போலீஸ் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்திருக்கிறது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

மும்பையில் இருக்கும் 'கொல்சேவாதி' போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் 'மாயூர் டோலஸ்' என்ற 21 வயது இளைஞன் காணவில்லை என்று அவனது பெற்றோரால் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலை ஓரத்தில் அந்த இளைஞனின் உடலை கண்டுபிடித்தனர்.

மாட்டிக் கொண்ட நண்பர்கள்

மாட்டிக் கொண்ட நண்பர்கள்

இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் கடைசியாக கால் செய்து இருந்த பெண் தோழியிடம் விசாரணை செய்தனர். அந்த பெண், மாயூர் அவர் நண்பர்களுடன் சாப்பிட செல்வதாக கூறியதை வாக்குமூலமாக அளித்து இருக்கிறார். இந்த நிலையில் போலீசார் அவரது நண்பர்களான கோகுல், பிரமோத் என்ற இருவரிடமும் விசாரணை செய்தனர்.

பலே திட்டம்

பலே திட்டம்

முதலில் கோகுல் தான் செய்த கொலையை ஒப்புக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். ஆனால் பிரமோத் போலீசாரை பார்த்தவுடன் அனைத்து உண்மைகளையும் கூறியிருக்கிறார். மேலும் டிரிட்டிற்கு சாப்பாடு வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மாயூர் சாப்பாட்டில் விஷம் கலந்து கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

பணத்திற்காக செய்த கொலை

பணத்திற்காக செய்த கொலை

கொலையை செய்துவிட்டு உடலை பைக்கில் 6 கிலோ மீட்டர் எடுத்து சென்று இருக்கின்றனர். இந்த கொலையை 25 லட்சம் பணத்திற்காக செய்து இருக்கின்றனர். ஆனால் கொலை செய்த பின் பயமாக இருந்ததால் மயூராவின் குடும்பத்திடம் பணம் கேட்கவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட மாயூராவின் பக்கத்து வீட்டிலேயே வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+