மும்பை ரயில் நிலையத்தில் தூங்கிய 5, 7 வயது சகோதரிகள் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
மும்பை: ரயில் நிலையத்தில் தங்கியிருந்த 5 மற்றும் 7 வயது சகோதரிகள் இருவரை தொடர்ந்து மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்த இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை பாந்துப் ரயில்வே நிலையம் அருகே சாலை அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தபட்டதால் வீட்டை இழந்த குடும்பம் ஒன்று தங்கள் சொந்த ஊரான ரத்தினகிரிக்கு செல்லும் பொருட்டு ரயில்வே நிலையத்தில் தங்கி இருந்ததாகச் சொல்லப் படுகிறது.
அக்குடும்பத்தில் ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு சிறுமிகள் இருந்துள்ளனர். இவர்களில் 5 வயது சிறுமிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவையடுத்து அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக குர்லா ரயில்வே போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிகள் இருவரையும் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 19 மற்றும் 21 வயது உடைய 2 வாலிபர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
மேலும், பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகளை அதிகாலை 4 மணியளவில் தூக்கிச் சென்று கடந்த மூன்று நாட்களாக வாலிபர்கள் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குற்றவாளிகளை வளைத்துப் பிடித்த போலீசார் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 363, மற்றும் 34 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications