இஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்குள் வரக்கூடாது.. கர்நாடக பாஜக எம் எல் ஏ பேச்சால் அதிர்ச்சி
இஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்று கர்நாடக பாஜக எம் எல் ஏ பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பெங்களூரு : இஸ்லாமியர்கள் யாரும் தனது அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று கர்நாடக சட்டசபை உறுப்பினர் பசனகவுடா பாட்டில் பேசி இருப்பதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
கர்நாடகாவில் நடந்த விழா ஒன்றில் பேசிய பசனகவுடா பாட்டில் என்கிற பாஜக சட்டசபை உறுப்பினர் இஸ்லாமியர்களை தனது அலுவலகத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று பேசி இருக்கும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விழாவில் பேசிய பசனகவுடா பாட்டில் பேசுகையில், தான் இந்துக்கள் வாக்குகளாலேயே சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அதனால், அவர்களுக்கு மட்டுமே பணி செய்வேன்.
இஸ்லாமியர்கள் தனது அலுவலகத்திற்கு வரக்கூடாது. அவர்களுக்கு கார்ப்பரேட்டுகளும் எந்த உதவியும் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பசனகவுடா , தாடி வைத்துக்கொண்டும், புர்கா அணிந்தும் யாரும் தன்னை பார்க்க அனுமதிக்க கூடாது என்று தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.,வின் இந்த சர்ச்சைப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்