படுக்கையறை, கழிவறைகளில் அடக்கம் செய்யப்படும் 'முலாயம் தொகுதி' சடலங்கள்
லக்னோ: இடுகாடு இல்லாத காரணத்தால் இறந்தவர்களை வீட்டின் படுக்கையறை மற்றும் கழிவறை போன்ற இடங்களிலேயே அடக்கம் செய்து விடுகிறார்களாம் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில்.
உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் தொகுதியான எடாவாவில் சாகர்நகர் கிராமத்தில் தான் இந்த அவலநிலை. இங்குள்ள ஏழை மக்களுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமுமில்லை, இடுகாடும் இல்லையாம்.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இடுகாடு கொடுக்கப்படாததால் இங்குள்ள மக்கள் இறந்தவர்களின் சடலத்தை தங்கள் வீட்டிலேயே, அதாவது, படுக்கையறை, கழிவறை என புதைக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்களாம். சிலர் சடலங்களை சாலையில் கூட புதைக்கிறார்களாம்.
ஆரம்பகாலத்தில் இப்பகுதியில் 6 வீடுகள் மட்டுமே இருந்துள்ளன. அப்போது அவ்வூரின் மொத்த ஜனத்தொகையே 250 பேர்கள் தானாம். ஆனால் இப்போது அங்கு திறந்த வெளிகளே இல்லை என்ற அளவிற்கு குடியிருப்புகள் அதிகரித்து விட்டன.
மாநிலம் முழுதும் உள்ள சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்ப கோடிக்கணக்கில் செலவிடும் சமாஜ்வாடி கட்சி முலாயம் தொகுதியில் வீட்டிலேயே முஸ்லிம் மக்கள் இறந்தவர்களை புதைப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறது என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications