முசாபர்நகர் கிடக்குது: 5 நாடுகளுக்கு டூர் கிளம்பிய உ.பி. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்
லக்னோ: முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாடிக் கொண்டிருக்கையில் உத்தரபிரதேச அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குழு 5 நாடுகளுக்கு சுற்றுலா கிளம்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநில அமைச்சர்கள் 8 பேர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 17 பேர் கொண்ட குழு துருக்கி, நெதர்லாந்து, இங்கிலாந்து, கிரீஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா கிளம்பியுள்ளது. அந்த குழு இன்று காலை இஸ்தான்புல்லுக்கு கிளம்பிச் சென்றது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த 5 நாடுகளின் நாடாளுமன்ற யுக்திகளை கண்டறிந்து வரச் சென்றுள்ளனர்.
அவர்களின் சுற்றுலாவுக்காக சமாஜ்வாடி கட்சி அரசு ரூ.1 கோடி வழங்கியுள்ளது. அந்த குழுவுக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முசாபர்நகர் மாவட்ட பொறுப்பாளரான நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஆலம் கான் தலைமை தாங்கிச் சென்றுள்ளார். சுற்றுலா சென்றவர்களில் சர்ச்சையில் சிக்கி பதவியை ராஜினாமா செய்து மீண்டு அக்டோபரில் பதவியை பெற்ற ராஜா பைய்யாவும் அடக்கம்.
இது குறித்து ஜனதாதள தலைவர் அலி அன்வர் கூறுகையில்,
இங்கு மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இது எந்த ஒரு அரசுக்கும் அவமானமான செயல். எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் ஆனால் அவதிப்படும் மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பை மறந்துவிட வேண்டாம் என்றார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications