என் சாபமே காங்கிரசின் தோல்விக்குக் காரணம்... இது அசாராம் பாபு!
ஜோத்பூர்: சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சாமியார் அசாராம் பாபு, தனது சாபமே நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவ முக்கியக் காரணம் என தெரிவித்துள்ளாராம்.
தனது ஆசிரமத்தில் வைத்து சிறுமி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் அசாராம் பாபு கடந்த செப்டம்பர் 2ம் தேதி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி, பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதை வரவேற்றுள்ளார் சிறையில் உள்ள சாமியார் அசாராம் பாபு.
மேலும், தன் மீது தவறான குற்றம் சாட்டி, தனது பெயருக்கு களங்கம் விளைவித்து, தன்னை சிறைக்கு அனுப்பியதில் காங்கிரஸிற்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தனது வலிமை மிக்க சாபமே காங்கிரஸின் நான்கு மாநில தோல்விக்கு முக்கியக் காரணம் எனவும், பாரதீய ஜனதாவின் வெற்றி மூலம் மக்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாமியார் அசாராமின் மீதான குற்றம் நிருபிக்கப் பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக் கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications