தீவிரவாத தாக்குதல் நடந்த பஞ்சாபில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் கைது
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 27 வயது பெண் சாந்த் கான் என்பவர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அவரிடம் போலீசார் பாஸ்போர்ட்டை காண்பிக்குமாறு கூறினர். அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கராச்சியைச் சேர்ந்த அந்த பெண் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருகிறார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லூகூரில் ரயில் ஏறியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் வழக்கமாக ஜலந்தரில் நிற்காது. ஆனால் அதில் மர்ம பெண் வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து ரயில் அங்கு நிறுத்தப்பட்டது.
டெல்லி செல்ல ரயில் ஏறியதாகவும் அங்குள்ள மத வழிபாட்டு ஸ்தலத்திற்கு செல்வதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஸ்தலம் என்பது அவருக்கே தெரியவில்லை. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகரில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து மாநில போலீசார் எதையும் லேசாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
நேற்று குர்தாஸ்பூர் பேருந்து நிலையம் அருகே கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து சோதனை செய்து அந்த பொருள் வெடிகுண்டு அல்ல என்பதை தெரிவித்த பிறகே மக்கள் நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications