தீவிரவாத தாக்குதல் நடந்த பஞ்சாபில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் கைது
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 27 வயது பெண் சாந்த் கான் என்பவர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அவரிடம் போலீசார் பாஸ்போர்ட்டை காண்பிக்குமாறு கூறினர். அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கராச்சியைச் சேர்ந்த அந்த பெண் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருகிறார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லூகூரில் ரயில் ஏறியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் வழக்கமாக ஜலந்தரில் நிற்காது. ஆனால் அதில் மர்ம பெண் வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து ரயில் அங்கு நிறுத்தப்பட்டது.
டெல்லி செல்ல ரயில் ஏறியதாகவும் அங்குள்ள மத வழிபாட்டு ஸ்தலத்திற்கு செல்வதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஸ்தலம் என்பது அவருக்கே தெரியவில்லை. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகரில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து மாநில போலீசார் எதையும் லேசாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
நேற்று குர்தாஸ்பூர் பேருந்து நிலையம் அருகே கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து சோதனை செய்து அந்த பொருள் வெடிகுண்டு அல்ல என்பதை தெரிவித்த பிறகே மக்கள் நிம்மதி அடைந்தனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications