திடீர் மயக்கம்: அமைச்சர் சதானந்த கவுடாவின் மருமகள் என கூறிய நடிகை மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கின் மனைவி என்று கூறிய நடிகை மைத்ரியா கவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கிற்கு கடந்த 27ம் தேதி கொடகு பகுதியில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இது நடந்த சில மணிநேரத்தில் கார்த்திக் தன்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளதாக கன்னட நடிகை மைத்ரியா கவுடா என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் தான் கார்த்திக் கவுடாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

புகார்
செய்தியாளர்களை சந்தித்த பிறகு மைத்ரியா பெங்களூர் ஆர்.டி. நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் கவுடா மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர்.

பொய்
மைத்ரியா கவுடா சொல்வது எல்லாம் பொய். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என்று கார்த்திக் தெரிவித்தார்.

விளம்பரம்
சாண்டல்வுட்டில் வளர்ந்து வரும் நடிகையான மைதிர்யா சீப் பப்ளிசிட்டி தேடுவதாக கார்த்திக்கின் நண்பர்கள் அவர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

மயக்கம்
மத்திய அமைச்சரின் மகன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய மைத்ரியா திடீர் என்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீக்
மைத்ரியா வீக்காக இருப்பதால் தான் மயங்கியதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஒளிபரப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications