தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: இன்று பிரதமர்-மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு
டெல்லி: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவ அமைப்புகளை சேர்ந்த 20 பேர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்திக்கிறார்கள்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 210 பேரையும், 75 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் கடந்த 11ம் தேதியில் இருந்தும், தாலுகா மீனவர்கள் 16ம் தேதியில் இருந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் நாகையில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டமும் நடந்தப் பட்டது.
அதன் பின்னர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் 12 பேர் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இது குறித்து பேசினர். அதன்பிறகு, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், உண்ணாவிரதம் இருந்த மீனவர்களை திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின்பேரில், சந்தித்த பாராளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, ‘இந்த பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து, மீனவர்கள் கடந்த 24ம் தேதி தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஆனால், மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து இன்று 17வது நாளாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மனோகரன், மீனவர் அமைப்பை சேர்ந்த கவுதமன், எஸ்கேஜி.சேகர், முத்து, தட்சிணாமூர்த்தி, சுரேஷ், புதுகை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த முருகன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் உள்பட 20 பேர் இடம் பெற்றுள்ள குழு, இன்று டெல்லியில் பிரதமரைச் சந்திக்க உள்ளனர். இவர்களுடன் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏகேஎஸ்.விஜயன் எம்.பி ஆகியோர் உடன் செல்கின்றனர்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இரு நாட்டு மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் அவர்கள் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications