நக்மா, ஜெயப்பிரதா.. தலைவிதி இன்று நிர்ணயம்.. 3வது கட்ட வாக்குப் பதிவின் விஐபி வேட்பாளர்கள்
டெல்லி: நடிகைகள் நக்மா, ஜெயப்பிரதா, குல்பனாக் போன்றோரின் தலைவிதியை இன்று மக்கள் தீரமானிக்கிறார்கள். இன்று நடந்த 3து கட்ட தேர்தலில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்களில் இவர்களும் சிலர்.
இன்று நடைபெறும் 3வது கட்ட தேர்தலில் பல முக்கிய விஐபிக்கள் களத்தில நிற்கின்றனர்.
அரசியல்வாசதிகள், வாரிசுகள், நடிகர், நடிகையர் என கலர்புல்லாக இருக்கிறது 3வது கட்ட தேர்தல்.
ஷீலா தீட்சித் மகன் சந்தீப்
டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் களத்தில் இருக்கிறார்.
கபில் சிபல்
அதேபோல டெல்லியின் முக்கிய வேட்பாளர்களில் இன்னொருவர் கபில் சிபல்.
ராஜ் பாப்பர்
முன்னாள் ஹீரோ ராஜ் பாப்ப்ர் காங்கிரஸ் வேட்பாளராக காஸியாபாத்தில் போட்டியிடுகிறார்.
ஜெயப்பிரதா
நடிகை ஜெயப்பிரதா பிஜ்னோர் தொகுதியில் போட்டியிடுகிறார். இது உ.பியில் உள்ளது.
மீரட்டில் நக்மா
உ.பி. மாநிலம் மீரட் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் நடிகை நக்மா களத்தில் நிற்கிறார்.
பீகாரில் மீரா குமார்
லோக்சபா சபாநாயகர் மீரா குமார் பீகார் மாநிலத்தில் போட்டியிடுகிறார்.
பாஸ்வான் மகன் சிராக்
பீகாரில் லோக்ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் களம் கண்டுள்ளார்.
நிதின் கட்காரி
வாழ்க்கையிலேயே முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி, மகாராஷ்டிர மாநலம் நாக்பூரில் களம் கண்டுள்ளார்.
குல்பனாக்
அழகு ராணி குல் பனாக் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் களம் கண்டுள்ளார்.