பலாத்காரம் போன்ற கொடூரங்களில் ஈடுபடும் சிறார்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் - நஜ்மா ஹெப்துல்லா
டெல்லி: பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோர் சிறார்களாக இருந்தாலும், குற்றத்தின் கடுமையைக் கருதி அவர்களுக்கும் கடும் தண்டனை தரப்பட வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறியுள்ளார்.

சமீபகாலமாக பாலியல் தொடர்பான குற்றங்கலில் சிறார்களும் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ஆனால், அத்தகைய குற்றங்களில் கைது செய்யப்படும் சிறார்கள் வயதைக் காரணம் காட்டி கடும் தண்டனைகளில் இருந்து தப்பி விடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பாலியல் குற்றவாளிகள் வயதைக் காரணம் காட்டி கடுமையான தண்டனையிலிருந்து தப்பி விடக் கூடாது என பேட்டியளித்துள்ளார் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது :-
கடும் தண்டனை...
கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோரில் பலர் சிறார்கள் இருப்பதால் கடும் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.
சிறார்கள் தான் அதிகம்....
குறிப்பாக பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் பலரில் சிறார்கள்தான் அதிகம் உள்ளனர்.
தண்டனை...
ஆனால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களையும், வயதான பிற குற்றவாளிகளுக்கு இணையாகவே கருத வேண்டும். தண்டனையும் வழங்க வேண்டும்.
தொடரத் தான் செய்யும்....
இப்படிப்பட்டவர்களை வயதைக் காரணம் காட்டி தண்டிக்காமல் விட்டு விட்டால், அதேபோன்ற குற்றச் செயல்கள் தொடரத்தான் செய்யும். மேலும் அத்தகைய குற்றச் செயல்களின் கடுமையும் குறையாமல் தொடரத்தான் செய்யும் என்று அவர் கூறினார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications