பலாத்காரம் போன்ற கொடூரங்களில் ஈடுபடும் சிறார்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் - நஜ்மா ஹெப்துல்லா
டெல்லி: பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோர் சிறார்களாக இருந்தாலும், குற்றத்தின் கடுமையைக் கருதி அவர்களுக்கும் கடும் தண்டனை தரப்பட வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறியுள்ளார்.

சமீபகாலமாக பாலியல் தொடர்பான குற்றங்கலில் சிறார்களும் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ஆனால், அத்தகைய குற்றங்களில் கைது செய்யப்படும் சிறார்கள் வயதைக் காரணம் காட்டி கடும் தண்டனைகளில் இருந்து தப்பி விடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பாலியல் குற்றவாளிகள் வயதைக் காரணம் காட்டி கடுமையான தண்டனையிலிருந்து தப்பி விடக் கூடாது என பேட்டியளித்துள்ளார் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது :-
கடும் தண்டனை...
கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோரில் பலர் சிறார்கள் இருப்பதால் கடும் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.
சிறார்கள் தான் அதிகம்....
குறிப்பாக பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் பலரில் சிறார்கள்தான் அதிகம் உள்ளனர்.
தண்டனை...
ஆனால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களையும், வயதான பிற குற்றவாளிகளுக்கு இணையாகவே கருத வேண்டும். தண்டனையும் வழங்க வேண்டும்.
தொடரத் தான் செய்யும்....
இப்படிப்பட்டவர்களை வயதைக் காரணம் காட்டி தண்டிக்காமல் விட்டு விட்டால், அதேபோன்ற குற்றச் செயல்கள் தொடரத்தான் செய்யும். மேலும் அத்தகைய குற்றச் செயல்களின் கடுமையும் குறையாமல் தொடரத்தான் செய்யும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications