காங்கிரசுக்கு கல்தா கொடுக்கப்போகிறாரா இன்போசிஸ் நிலேகனி?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நந்தன் நிலேகனி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நிலேகனி, கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் ஆதார் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தென் பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், பாஜகவின் அனந்த்குமாரிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தற்போது காங்கிரசில் முக்கியத்துவம் கிடைக்காத நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி, கல்வி பணிகளில் கூடுதல் நேரத்தை செலவிட அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால், இதுகுறித்து பத்திரிகையாளர்கள் நிலேகனியை தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications