மோடிக்கு வாழ்த்து சொன்ன எதியூரப்பா! மீண்டும் பாஜகவில் ஐக்கியம்?
பெங்களூர்: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் எதியூரப்பா. மேலும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைவது தொடர்பாக ஆலோசிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியை அதிகாரப்பூர்வமாக பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததும் எதியூரப்பா அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

பின்னர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, நரேந்திர மோடி மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் பிரதமராக ஒத்துழைப்பு கொடுப்போம்.
வாஜ்பாய் போல மோடியையும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பா.ஜ.க.வுடன் கர்நாடக ஜனதா கட்சியை இணைப்பது பற்றி ஆலோசிக்கப்படும். வரும் 18-ந்தேதி மூத்த தலைவர்கள் ஒன்று கூடி இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதனால் அவர் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு திரும்புவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications