இத்தாலி மாலுமிகள் நாட்டுக்கு செல்ல உதவியது யார்? சோனியாவுக்கு மோடி கேள்வி
இடாநகர்: மீனவர்கள் கொலை வழக்கில் கைதான இத்தாலி நாட்டு மாலுமிகள் தங்கள் நாட்டுக்கு செல்ல உதவியது யார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசுகையில், நாட்டுப்பற்று குறித்து சிலர் தம்பட்டம் அடிக்கின்றனர். மதவாதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இடாநகரில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

தேசப்பற்றைப் பொறுத்தமட்டில் நாட்டு மக்களுக்கு சோனியா நற்சான்றிதழ் வழங்கத் தேவையில்லை. நாட்டின் மீது மக்கள் கொண்ட பற்றுபற்றி அவர் கேள்வி எழுப்பக்கூடாது.
காஷ்மீரில், பாகிஸ்தானியர்களால் இந்திய வீரர்கள் கொல்லப்படுகிறபோதுகூட காங்கிரஸ் பதிலடி கொடுக்க எண்ணியதில்லை. அருணாச்சல பிரதேச வாலிபர் நிதோ தானியா கொடூரமாக டெல்லியில் கொல்லப்பட்டார்.
இத்தகைய சம்பவங்கள் எனக்கு மன வலியை ஏற்படுத்தின. அம்மையார் அவர்களே, கேரளாவில் இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய மாலுமிகள் யாருடைய வழிகாட்டுதலின்பேரில், தங்களுடைய நாட்டுக்கு சென்றனர்? அவர்கள் தங்கள் நாட்டுக்கு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு உதவியாக இருந்தது யார்?
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கடினமான நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால், அந்த மாலுமிகள் இங்கே திரும்பி வந்திருக்க மாட்டார்கள்.
இவ்வாறு மோடி பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications