For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அமோக வெற்றி- பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி : இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இலங்கை இடையே உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

modi telephone

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில், ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்று, ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது..

தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுடன் தோலபேசி மூலம் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ரணில் தலைமையில், இந்தியா இலங்கை இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கையுள்ளது.

அமைதியாக தேர்தல் நடந்ததற்காக இலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

English summary
The Prime Minister, Shri Narendra Modi has congratulated Mr. Ranil Wickremesinghe, on the wonderful performance of his alliance in the elections in Sri Lanka. "Spoke to Mr. Ranil Wickremesinghe and congratulated him on his alliance's wonderful performance in the elections. I am confident that under Mr. Wickremesinghe's leadership, bilateral ties between India and Sri Lanka will get stronger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X