டிவைடரில் மோதி சிதைந்த பேருந்து.. நூலிழையில் தப்பிய பயணிகள்!! - வீடியோ
மத்தியப்பிரதேசத்தில் பேருந்து ஒன்று சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
கர்னி: மத்தியப்பிரதேசத்தில் பேருந்து ஒன்று சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி முற்றிலும் சேதமடைந்தது. இதில் பேருந்தின் பின்பக்கம் சிதைந்தது சின்னாபின்னமானது.
மத்தியப்பிரதேச மாநிலம் கர்னிப் பகுதியில் சாலையில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த டிவைடரில் ஏறி அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.

பஸ்ஸே இரண்டு துண்டாவது போல் இருந்தது அந்த விபத்து. இதில் பேருந்தின் பின் பக்க டயர்கள் அப்படியே கழன்டு வெளியே வந்தது.
பின்பக்கம் மொத்தமாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் நூலிழையில் தப்பித்தனர். இந்த கோரக்காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
#TerrificCCTV: narrow escape for many passengers when a bus rammed into the divider at Karni in MP.@CNNnews18 pic.twitter.com/DSENxhMFCv
— Manoj Sharma (@manojsharmabpl) May 5, 2017












Click it and Unblock the Notifications