மத்திய பல்கலை கழகங்களில் 207 அடி உயர கம்பத்தில் தேசியகொடி பறப்பது கட்டாயம்: ஸ்மிருதி இராணி
டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் 207 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விடுவது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் டெல்லியில் அவசர கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஹைதரபாத் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை சம்பவம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிடுவது கட்டாயம் ஆக்கப்படுகிறது என அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்தார். மேலும் டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ளது போல் 207 அடி உயர கம்பத்தில் பறக்க விடுவது எனவும் அதேபோல் தேசியக் கொடியின் அளவும் வரை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதும், தேசப்பற்று மற்றும் தேச விரோதம் தொடர்பாக போராட்டங்களும், கருத்து மோதல்களும் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசியக் கொடியை பறக்கவிடுவதன் மூலம் மாணவர்களிடம் தேசப்பற்றை அதிகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications