மும்பையில் கருப்பு உடையில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாட்டம்... உச்சகட்ட உஷார் நிலையில் கடற்படை!
மும்பை: ஆயுதங்களுடன் மும்பை உரான் கடற்படை தளம் அருகே மர்ம நபர்கள் நடமாடியதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மும்பையில் கடற்படையினர் உச்சகட்ட உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து ராணுவ முகாம்களும் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மர்ம மனிதர்கள்...
இந்த நிலையில் மும்பை கடற்படை தளம் வெடிமருந்து கிடங்கு அருகே கருப்பு உடை தரித்த ஆயுதம் தாங்கிய 5 அல்லது 6 மர்ம மனிதர்கள் நடமாடியதாக பள்ளி மாணவர்கள் 2 பேர் பள்ளிக்கூட நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.

ஓஎன்ஜிசி, ஸ்கூல்
அந்த மர்ம மனிதர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றை பேசியதாகவும் ஓஎன்ஜிசி, ஸ்கூல் என்ற வார்த்தைகளையே திரும்ப திரும்ப கூறியதாகவும் அம்மாணவர்கள் கூறினர். இது குறித்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது.

உச்சகட்ட உஷார்
இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படை ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரான் கடற்படை தளப் பகுதியில் அங்குலம் அங்குலமாக தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மீண்டும் 2008 தாக்குதல்?
2008-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக மும்பைக்குள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 166 பேர் பலியாகினர். அதுபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்தத்தான் அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக ஊடுருவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

வன பாதுகாவலர்கள்?
இதனிடையே மாணவர்கள் பார்த்தது தீவிரவாதிகள் அல்ல.. வன பாதுகாவலர்கள்... அவர்கள்தான் ரோந்து செல்லும் போது பச்சை நிறை சீருடை அணிந்து ஆயுதங்களுடன் செல்வார்கள். அவர்களைப் பார்த்துதான் மாணவர்கள் தீவிரவாதிகள் என கூறியிருக்கக் கூடும் என மகாராஷ்டிரா மாநில உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications