கோவா அருகே கடலில் விழுந்த கடற்படை விமானம்.. 2 அதிகாரிகள் மாயம்!
Subscribe to Oneindia Tamil
கோவா: கோவா அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் சிக்கி 2 அதிகாரிகள் மாயமாகிவிட்டனர். மேலும் ஒருவர் மீட்கப்பட்டார்.

கோவா கடற்பகுதியி்ல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானது. இதில் இருவர் மாயமாயினர். கோவா மாநில கடற்பகுதியில் கப்பல் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் விபத்திற்குள்ளானது. கடலில் விழுந்த விமானி மீனவர்கள் மூலம் மீட்கப்பட்டார். விமானத்தில் பயணம் செய்த மேலும் இருவர் மாயமாகினர். தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட அதிகாரி பெயர் கமாண்டர் ஜோஷி என்று தெரியவந்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications