டெல்லி வந்தார் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இஸ்லாமாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அந்நாட்டின் ராணுவம், இந்தியாவுக்கு நவாஸ் செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் தீவிரவாத இயக்கங்களும் நவாஸ் ஷெரீப் இந்தியா செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த எதிர்ப்புகளை மீறி இன்று நவாஸ் ஷெரீப் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நவாஸ் ஷெரீப் இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications