இயக்கம் மீது வெறுப்படைந்து சரணடைந்த மாவோயிஸ்ட் தலைவர்: ஆந்திர டிஜிபி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மாவோயிஸ்ட் தலைவர் தனது மனைவியுடன் ஆந்திர போலீசார் முன்பு சரண் அடைந்தார். அவர் மாவோயிஸ்ட் இயக்கம் மீது வெறுப்பு கொண்டதால் தான் சரண் அடைந்ததாக டிஜிபி பிரசாத் ராவ் தெரிவித்துள்ளார்.

முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் ஜிவிகே பிரசாத் என்ற குட்சா உசென்டி(45). அவரது மனைவி சந்தோஷி மர்கம் என்ற ஜைனி. உசென்டி தலைக்கு போலீசார் ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தனர். இந்நிலையில் உசென்டி தனது மனைவியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திர போலீசார் முன்பு சரண் அடைந்தார்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் இன்று நடந்த பத்திர்க்கையாளர் சந்திப்புக்கு அழைத்து வந்தார் ஆந்திர மாநில டிஜிபி பி பிரசாத ராவ்.

அப்போது ராவ் கூறுகையில்,

உசென்டிக்கு மாவோயிஸ்ட் அமைப்பின் கொள்கைகள் பிடிக்கவில்லை. அதனால் தான் அந்த இயக்கம் மீது வெறுப்படைந்து போலீசில் சரண் அடைந்துவிட்டார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதும் சரணடைய ஒரு காரணம். அவர் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தொகை உசென்டிக்கே வழங்கப்படும்.

Naxal leader surrendered as he was fed up with movement: DGP

அவர் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அதனால் அவரை அந்த 3 மாநில போலீசாரிடமும் ஒப்படைப்போம் என்றார்.

ஆந்திர மாநிலம் வாரங்கல்லைச் சேர்ந்த உசென்டி கடந்த 28 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்துள்ளார். மாவோயிஸ்டுகள் பள்ளிகளை தகர்ப்பது, சாலைகளை சேதப்படுத்துவது மற்றும் அப்பாவி மக்களை போலீஸ் உளவாளிகள் என்று கூறி கொல்வது உசென்டிக்கு சற்றும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+