சத்தீஸ்கரில் பாதுபாப்பு படையை குறிவைத்து நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! 9 வீரர்கள் வீரமரணம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர் மாவட்டத்தில் ரிசர்வ் காவலர் படை வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நக்சல்கள் ஐஇடி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 8 வீரர்கள் மற்றும் டிரைவர் என 9 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
இந்தியாவில் நக்சலைட்கள் பிரச்சினை பல காலமாகவே தொடர்கிறது. நக்சலைட்களை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேநேரம் நமது பாதுகாப்புப் படையைக் குறிவைத்தும் நக்சலைட்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது சத்தீஸ்கரில் நடந்துள்ளது.
ஐஇடி தாக்குதல்:
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று இந்த கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. அங்கு மாவட்ட ரிசர்வ் காவலர் படை (டிஆர்ஜி) வீரர்கள் சென்ற வாகனத்தை நக்சல்கள் ஐஇடி வெடிகுண்டு பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளனர்.. பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பெத்ரே-குத்ரு என்ற சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 8 பேர், வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு அதிரடி ஆப்ரேஷனை முடித்துக் கொண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த அனைவரும் டிஆர்ஜி எனப்படும் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்கள் ஆகும். இது அம்மாநில காவல்துறையின் ஒரு பிரிவாகும்.
அதிகாரிகள் சொல்வது என்ன:
இத தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) பஸ்தர் கூறுகையில், "தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் ஆகிய பகுதிகளின் கூட்டு ஆப்ரேஷன்களை முடித்துக் கொண்டு தங்கள் முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அடையாளம் தெரியாத மாவோயிஸ்டுகள் பிஜாப்பூர் மாவட்டத்தின் குத்ரு காவல் நிலையப் பகுதியில் ஐஇடியை வெடிக்கச் செய்தனர். விரைவில் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைப் பகிர்வோம்" என்றார்.
சத்தீஸ்கர் சபாநாயகர்:
இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் சட்டமன்ற சபாநாயகர் டாக்டர் ராமன் சிங் கூறுகையில், "நக்சலைட்டுகளுக்கு எதிராக முக்கியமான ஆப்ரேஷன்களை நடத்தும் போதெல்லாம்.. இந்த நக்சலைட்டுகள் கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் இதனால் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்படாது. தொடர்ந்து சத்தீஸ்கர் அரசும் மத்திய அரசும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும்" என்றார்.
பின்னணி
சத்தீஸ்கரின் பஸ்தாரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 நக்சலைட்டுகள் நேற்றைய தினம் தான் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் நடந்த மறுநாளே இந்த கொடூரம் நடந்துள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை மாலை (ஜனவரி 4) நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் அங்குப் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications