நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சரத்பவார்
மும்பை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் அறிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் பேசிய அவர், கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
அதேசமயம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் தாம் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சரத் பவார் கூறினார்.
அதே நேரத்தில் மகாராஷ்டிர அரசில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் சிலர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.
தொகுதிப் பங்கீடு
காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படவேண்டும் என்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பிரஃபூல் பட்டேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.