பெரிய கம்புகளுடன் மோதிக் கொண்ட ஊர்மக்கள்.. 50 பேர் காயம்.. ஆந்திராவில் நடந்த வினோத திருவிழா!
ஆந்திராவில் நடைபெற்ற விநோத திருவிழாவில் 50 பேர் காயமடைந்தனர்.
Recommended Video
கர்னூல்: ஆந்திராவில் நடைபெற்ற விநோதமான பண்ணி திருவிழாவில் 50 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் தேவரகட்டு. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் பண்ணி எனும் திருவிழா நடைபெறும்.
அந்த கிராமத்தில் உள்ள மால மல்லேஸ்வர சுவாமி கோயிலில் தசரா பண்டிகையையொட்டி இத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் மக்கள் கலந்துகொள்வர்.

பண்ணி திருவிழாவின் போது, கிராம மக்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒருவரைவொருவர் பெரிய பெரிய கம்புகளால் தாக்கிக்கொள்வர். ஊர்வலமாக எடுத்து வரப்படும் சாமி சிலையை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்காகவே இந்த சண்டை. யார் பக்கம் சாமி சிலைகள் வருகிறதோ அந்த ஊர் மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இந்த திருவிழா பார்ப்பதற்கு ஒரு பெரிய கலவரம் போன்று காட்சியளிக்கும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் வழக்கம் போல் கிராம மக்கள் இரண்டு அணிகளாக பிரிந்து, பெரிய கம்புகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
கம்பு சண்டையில் ஈடுபட்ட 50 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 4 பேர் படுகாயம் அடைந்ததாக கர்னூல் மாவட்ட எஸ்.பி. பகீரப்பா காகிநெல்லி தெரிவித்தார். ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications