ஹைட்ரோ கார்பன் போராட்டத்தை கைவிடலாமா… அமைச்சரை சந்தித்த பின்னர் நெடுவாசல் குழுவினர் தகவல்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடும் சூழல் உருவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த பின்னர் நெடுவாசல் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய நெடுவாசல் குழுவினர் இன்று டெல்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயுவை எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் வெடித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை கதி கலங்க வைத்தனர்.
தொடர்ந்து 22 நாட்கள் நடந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications