தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு!
நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த கோரும் வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
டெல்லி: நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை தொடங்க உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்ட வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில், தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டது. அதன்பேரில் கடந்த திங்கள்கிழமை மத்திய அரசிடம் புதிய சட்ட வரைவை தமிழக அரசு சமர்ப்பித்தது.

இந்நிலையில் நீட்டுக்கு ஓராண்டு விலக்கு அளித்தால் அந்த தேர்வுக்காக தயாரான மாணவர்களின் நலன் கேள்விக்குறியாகிவிடும் என்று ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் நேற்று மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜரானார்.
அப்போது, மருத்துவ சேர்க்கைக்கு தமிழகத்துக்கு கால அவகாசம் அளிக்க முடியாது. மருத்துவ சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியாகும். நீட் விவகாரத்தில் தமிழகத்தின் செயல்பாட்டை ஏற்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழக அரசின் நீட் விலக்கு அவசர சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

தமிழகத்தின் அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கேகே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக முடியாததால் அவருக்குப் பதிலாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா ஆஜராகி நீட் அவசர சட்டம் குறித்து விளக்கமளித்தார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications