இன்னும் 2 வாரங்களில் வெளியாகிறது நீட் ரிசல்ட்: சிபிஎஸ்இ தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்னும் இரு வாரங்களில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்த சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்னும் 2 வாரங்களுக்குள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அபப்படியானால் ஜூன் 26ம் தேதிக்குள் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரிசல்டு வெளியாகிவிடும்.

NEET 2017: CBSE to declare results in 2 weeks

எப்போது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பது சிபிஎஸ்இ நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. ஏற்கனவே குஜராத் ஹைகோர்ட்டிலும் நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இனிமேல் விசாரிக்கப்படமாட்டாது என தெரிகிறது.

பல லட்சம் மாணாக்கர்கள் வருங்காலம் தொடர்புடைய பிரச்சினை எனப்தால்இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+