நாகாலாந்தில் என்டிபிபி - பாஜக கூட்டணி முதல்வர் நெப்யூ ரியோ?
நாகாலாந்தில் என்டிபிபி மற்றும் பாஜக கூட்டணி முதல்வர் நெப்யூ ரியோ பதவியேற்பார் என தெரிகிறது.
டெல்லி: நாகாலாந்தில் பாஜக அங்கம் வகித்த என்டிபிபி கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான நெப்யூ ரியோவே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகாலாந்து மக்கள் முன்னணி என்ற கட்சியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ரியோ தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி (என்டிபிபி) என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 2013-இல் ஆளும் நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் வகித்து வந்த கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது.

இதையடுத்து என்டிபிபி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி தற்போது வெற்றி கனியை பறிக்க உள்ளது. ஏறத்தாழ இந்த கூட்டணியின் வெற்றி உறுதி என்று கூறும் நிலையில் மாநிலத்தின் அடுத்த முதல்வராக நெப்யூ ரியோ தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இவர் அங்காமி-2 தொகுதியில் போட்டியிட்டியின்றி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை.
கடந்த 2003-ஆம் ஆண்டு நாகா மக்கள் முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக நாகாலாந்தின் முதல்வரானார் ரியோ. அதன் பின்னர் 2008-இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் 11 ஆண்டுகள் அங்கு ஆட்சி நடத்தினார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அக்கட்சியிலிருந்து பிரிந்து என்டிபிபி என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் இந்த கட்சியே அதிகமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் ரியோ அடுத்த முதல்வராவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications