ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 6 பேர் பலி.. எவரெஸ்டை ரசிக்க போய் விபத்தில் சிக்கிய சோகம்
காத்மண்டு: நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை ரசிக்க ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பலை பார்க்கப்போனவர்கள் நீருக்குள் ஜலசமாதியாகினர். நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் இப்போது ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டு அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாகச பயணம் செய்ய வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். விடுமுறை காலத்தில் அதிக செலவு செய்து சுற்றுலா செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கவும் நேரிடுகிறது. நேபாள நாட்டின் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்ற ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், அந்த ஹெலிகாப்ட கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனையடுத்து அந்த ஹெலிகாப்டர் மாயமான நிலையில், உடனடியாக மீட்பு குழுவினர் அந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காணாமல் போன ஹெலிகாப்டரின் இடிபாடுகளை தேடுதல் குழு கண்டுபிடித்துள்ளது. லிகு பிகே கிராம சபை மற்றும் லமாஜுரா தண்டா ஆகிய இடைப்பட்ட பகுதியில் அந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த விமானத்தில் பயணித்த 6 பேரில் 5 பேரின் உடல்களையும் அந்த கிராம மக்கள் மீட்டுள்ளதாக கோஷி மாகாண காவல்துறை டிஐஜி ராஜேஷ்நாத் பாஸ்டோலா கூறியுள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தை ரசிக்க சென்ற போது ஹெலிகாப்டர் மலை உச்சியில் இருந்த மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. மீதமுள்ள ஒருவரின் நிலை என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications