கல்லூரி பேராசிரியர் பதவிக்கான நெட் தேர்வு- தமிழகத்தில் மட்டும் 50,000 பேர் பங்கேற்பு
சென்னை: நாடு முழுவதும் கல்லூரி பேராசிரியர் பதவிக்கான நெட் தகுதி தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக சேர முடியும். இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை இந்த தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான, 2-வது 'நெட்' தேர்வு, இன்று நடைபெற்றது.

நாடு முழுவதும், 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில், 10 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ளிட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.
இன்று நடைபெற்ற நெட் தேர்வில் 3 தாள்களுக்கு விடையளிக்கப்பட்டது. இந்தத் தேர்வானது காலை 9.30 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
முதல் தாள் 100 மதிப்பெண் கொண்டது. 60 கேள்விகள் அடங்கிய முதல் தாளுக்கு, 75 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில், 50 கேள்விகளுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். இரண்டாவது தாளுக்கும், 100 மதிப்பெண் அதில் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
மூன்றாவது தாளுக்கு 150 மதிப்பெண். இதில் 70 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். இந்த தாளுக்கு, இரண்டரை மணி நேரம் வழங்கப்பட்டது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications