புது ரூ2,000, நோட்டு வெச்சிருக்கீங்களா? உங்ககிட்ட மோடியே பேசும் ஆப் ரிலீஸ்... 'அவ்ளோ' பாதுகாப்பு!
புதிய ரூ2,000 நோட்டுகள் மூலம் மோடியின் பேச்சை கேட்கும் ஆப் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
டெல்லி: புதிய ரூ2,000 அல்லது ரூ5,00 நோட்டை ஸ்கேன் செய்தால் பிரதமர் மோடியின் உரை இடம்பெறக் கூடிய வகையில் வடிமைக்கப்பட்ட ஒரு ஆப் வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இது புதிய ரூபாய் நோட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதியதாக ரூ500, ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இதனால் 10 நாட்களுக்கும் மேலாக புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகி கிடக்கிறது.

அதே நேரத்தில் புதிய ரூ2,000, 500 நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை கேள்விக்குள்ளாக்கும் வகையில் புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Modi keynote" என்ற ஆப்பை நீங்கள் உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் ஆன பின்னர் Scan 500 or 2000 Rs notes click below என்ற ஆப்சன் வரும்... அப்போது உங்களது ரூ2,000 அல்லது ரூ500 நோட்டை மொபைல் மூலமாக ஸ்கேன் செய்தால், பிரதமர் மோடி கருப்புப் பணம் குறித்து கோவாவில் கண்ணீரும் கம்பலையுமாக ஆற்றிய உரை ஆட்டோமேடிக்காக ஒளிபரப்பும்.

அதே நேரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் எதையும் இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்யவே முடியாது. இந்த ஆப் செயலிழந்து போய்விடும். இந்த ஆப் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் முக்கிய அம்சங்களை உள்வாங்கி இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளதால் அவை பாதுகாப்புக்குரியதுதானா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications