புதிய ரூ500 நோட்டுகள் இனி வங்கிகளில் கிடைக்கும்! டெல்லி, போபாலில் இன்றே விநியோகம்!!
புதிய ரூ500 நோட்டுகள் நாடு முழுவதும் இனிவங்கிகளிலும் கிடைக்கும்.
டெல்லி: மத்திய அரசு வெளியிட்ட புதிய ரூ500 நோட்டுகள் நாடு முழுவதும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ500 நோட்டுகள் இன்றே விநியோகிக்கப்பட்டன.
ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தங்கள் வசம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் தொடர்ந்து திண்டாடி வருகின்றனர்.

வங்கி ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்துடன் வங்கியில் பணத்தை மாற்றும் போது ரூ2,000 நோட்டு மட்டுமே கொடுக்கப்பட்டதால் அதை மாற்றுவதற்கும் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு புதிய ரூ500 நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் இன்றே ரூ500 புதிய நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.
New Rs 500 notes issued, visuals from a bank in Bhopal. pic.twitter.com/biWBCzjQYA
— ANI (@ANI_news) November 13, 2016
வங்கிகள் நாளை முதல் புதிய ரூ500 நோட்டுகள் எளிதாக கிடைக்கும். அதே நேரத்தில் ஏடிஎம்களில் ரூ500 புதிய நோட்டுகள் பெற மேலும் ஒருசில நாட்களாகும் எனவும் கூறப்படுகிறது. தற்போது புதிய ரூ500 நோட்டுகள் விநியோகிக்கப்படுவதால் பணத் தட்டுப்பாடு சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications