ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 9பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சோகம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று மதியம், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறிய படகில் பயணித்தபடி ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெருக்கெடுத்து வந்த வெள்ளம் படகை கவிழ்த்து அதில் இருந்த ராணுவ வீரர்கள் 9 பேரை இழுத்துச் சென்றது.
தகவல் அறிந்ததும், கூடுதல் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications