ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா உட்படுத்தப்பட வேண்டும்: சுப்ரீம்கோர்ட்

Subscribe to Oneindia Tamil

Nithyananda Will Take Potency Test, Rules Supreme Court
டெல்லி: ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பிடதியில் உள்ள ஆசிரமத்தில் பெண் சீடராக இருந்த ஆர்த்தி ராவை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நித்யானந்தா கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்த வழக்கில் ராம்நகர் சிறப்பு நீதிமன்றம் நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத் தாக்கல் செய்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார்.

தற்போது உச்சநீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+