தொடர் புகார்கள்.. குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடல்
Recommended Video
காந்திநகர்: தொடர்ந்து புகார்கள் எழுந்ததால் குஜராத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகத்தினர் மூடியுள்ளனர். இதையடுத்து ஆசிரமத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரு அருகே உள்ள பிடதியை தலைமையிடமாக கொண்டு நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். இவருக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
மேலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கிளைகளை அவர் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹீராபூரில் ஒரு தனியார் பள்ளியில் நித்யானந்தாவின் ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு 4 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டதாகவும் அவர்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

பெங்களூர் ஆசிரமம்
இதுதொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் புகாரின் பேரில் ஹீராபூர் ஆசிரமத்தில் இருந்த சர்மாவின் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் மீட்கப்பட்டனர். குருகுல கல்வி என்ற பெயரில் நித்யானந்தா ஆசிரமத்தில் சேரும் குழந்தைகளை நள்ளிரவில் எழுப்பி மேக்கப் போட வைத்து நித்யானந்தாவுடன் விளம்பரப்படங்களில் நடிக்க வைப்பதும் தெரியவந்தது.

தொழிலதிபர்கள்
மேலும் பணக்காரர்கள், தொழிலதிபர்களை குறிவைத்து இந்த சிறுமிகளை அனுப்பி நித்யானந்தா குறித்து புகழை பரப்பி அவர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்யவும் கட்டாயப்படுத்துவது தெரியவந்தது.
மேலும் நன்கொடை என்றால் 100, 1000 இல்லை.

அதிகபட்சம் 8 கோடி
குறைந்தது 3 லட்சம் ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வேண்டும். பணமாக இல்லாவிட்டால் நிலத்தையாவது எழுதி வாங்கி வரவேண்டுமாம். இப்படித்தான் நித்யானந்தா ஆசிரமத்துக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

புகார்கள்
இதுதொடர்பாக 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். நித்யானந்தாவை கைது செய்யவும் அவரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இந்த நிலையில் மேலும் சில புகார்கள் இந்த ஆசிரமம் குறித்து எழுந்த வண்ணம் உள்ளன.

பரபரப்பு
இதனால் நித்யானந்தா ஆசிரமத்தை மூட மாவட்ட நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications