தொடர் புகார்கள்.. குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடல்
Recommended Video
காந்திநகர்: தொடர்ந்து புகார்கள் எழுந்ததால் குஜராத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகத்தினர் மூடியுள்ளனர். இதையடுத்து ஆசிரமத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரு அருகே உள்ள பிடதியை தலைமையிடமாக கொண்டு நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். இவருக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
மேலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கிளைகளை அவர் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹீராபூரில் ஒரு தனியார் பள்ளியில் நித்யானந்தாவின் ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு 4 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டதாகவும் அவர்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

பெங்களூர் ஆசிரமம்
இதுதொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் புகாரின் பேரில் ஹீராபூர் ஆசிரமத்தில் இருந்த சர்மாவின் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் மீட்கப்பட்டனர். குருகுல கல்வி என்ற பெயரில் நித்யானந்தா ஆசிரமத்தில் சேரும் குழந்தைகளை நள்ளிரவில் எழுப்பி மேக்கப் போட வைத்து நித்யானந்தாவுடன் விளம்பரப்படங்களில் நடிக்க வைப்பதும் தெரியவந்தது.

தொழிலதிபர்கள்
மேலும் பணக்காரர்கள், தொழிலதிபர்களை குறிவைத்து இந்த சிறுமிகளை அனுப்பி நித்யானந்தா குறித்து புகழை பரப்பி அவர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்யவும் கட்டாயப்படுத்துவது தெரியவந்தது.
மேலும் நன்கொடை என்றால் 100, 1000 இல்லை.

அதிகபட்சம் 8 கோடி
குறைந்தது 3 லட்சம் ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வேண்டும். பணமாக இல்லாவிட்டால் நிலத்தையாவது எழுதி வாங்கி வரவேண்டுமாம். இப்படித்தான் நித்யானந்தா ஆசிரமத்துக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

புகார்கள்
இதுதொடர்பாக 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். நித்யானந்தாவை கைது செய்யவும் அவரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இந்த நிலையில் மேலும் சில புகார்கள் இந்த ஆசிரமம் குறித்து எழுந்த வண்ணம் உள்ளன.

பரபரப்பு
இதனால் நித்யானந்தா ஆசிரமத்தை மூட மாவட்ட நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications