காவிரியில் கேரளா, புதுவை நீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை- உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரியில் கேரளா, புதுவை நீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 177.2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இது 14.75 டிஎம்சி குறைவாகும். அதே அளவு தண்ணீர் கர்நாடகாவுக்கு அதிகமாக கிடைக்கப்போகிறது. இதில் பெங்களூர் 4.7 டிஎம்சி அதிக தண்ணீரை பெற உள்ளது.
எனவே நடுவர்மன்ற தீர்ப்புபடி கேரளா, புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவில் எந்த மாற்றமும் இல்லை. நடுவர்மன்ற இறுதி தீர்ப்புபடி கேரளாவுக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சியும் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications