ஊழலற்ற ஆட்சி…. கிரிக்கெட் போட்டி மூலம் பாஜக பிரச்சாரம்
கிரிக்கெட் போட்டி மூலம் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பல வித யுக்திகளை கையாளுகின்றனர்.
இளைஞர்களின் கிரிக்கெட் மோகத்தைப் பயன்படுத்தி பாஜக தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் வேட்பாளர் மோடி இந்த விளம்பரத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

யார் கேப்டன்
கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடத் தயாராகிறார் நடுவர். ஒரு டீம் கேப்டன் மட்டுமே நடுவர் முன்பு வந்து நிற்கிறார். ஆனால் மற்றொரு டீமில் இரண்டு பேர் வருகின்றனர். யார் கேப்டன் என்பது குழப்பமாக இருக்கிறது.

மோடிக்கு வாக்கு
பாஜக அணியில் மோடி தான் பிரதமர் வேட்பாளர். எதிர் அணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குழப்பம் நீடிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

குண்டர்கள் இல்லை
அவுட் கேட்கும் பவுலருக்கு அம்பயர் அவுட் தர மறுக்கிறார். அவரை அடித்து, முகத்தில் குத்தி அவுட் தரச் சொல்கின்றனர். உடனே மோடி ஆட்சியில் குண்டர்களே இருக்கமாட்டனர் என்கின்றனர்.

நேரம் வீணாகாது…
மோடி ஆட்சியில் எந்த ஒரு காரியத்திற்காகவும் நேரம் வீணாகாதாம். எனவே பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்கின்றனர்.

லஞ்ச ஊழலற்ற ஆட்சி
பேட்ஸ் மேனை அவுட் ஆக்கச் சொல்கிறார் பந்து வீச்சாளர். அதை அம்பயர் மறுக்கிறார். உடனே அம்பயருக்கு ரூபாய் நோட்டுக்களையும், டாலர்களையும் லஞ்சம் தருகிறார். அதை ஏற்க நடுவர் மறுக்கிறார். உடனே மோடி ஆட்சியில் லஞ்ச, ஊழல், மேட்ச் பிக்சிங் எதுவும் நடைபெறாது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications